கமுதி : கமுதி அருகே முத்தாலங்குளம் கிராமத்தில் செல்வ விநாயகர், நிறைகுளத்து அய்யனார், முப்பிடாரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வருடாபிேஷகம் பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜைகளுடன் துவங்கப்பட்டு விநாயகருக்கு பால்,சந்தனம், பன்னீர் உட்பட 21 வகையான அபிேஷகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகர், அய்யனார் பரிவார தெய்வங்கள் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.