திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தங்கத் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடந்த தங்கத் தேரை இந்து சமய அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு தேர் வடம் பிடித்து இழுத்தார். உடன் சட்டப்பேரவைத்துணை தலைவர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.