Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னி : மனப்பக்குவம் உண்டாகும் விருச்சிகம் : சுகமான சூழல் உருவாகும் விருச்சிகம் : சுகமான சூழல் உருவாகும்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துலாம் : பருவத்தே பயிர் செய்
எழுத்தின் அளவு:
துலாம் : பருவத்தே பயிர் செய்

பதிவு செய்த நாள்

05 நவ
2021
04:11


சித்திரை 3, 4ம் பாதம்: காலம் அழியேல்

அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தினால் சங்கடத்தைச் சந்தித்து வரும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சிறப்பான நற்பலன்களைத் தரும். தடைகள் விலகி பணிகள் விரைவாக நடக்கக் காண்பீர்கள். செவ்வாயை நட்சத்திர அதிபதி ஆகவும் சுக்ரனை ராசி அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப்போடாமல் உடனுக்குடன் செய்து முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். கையில் எடுத்துக்கொண்ட பணியினை பொறுப்பாக செய்து முடிக்கும் வரை உறங்கமாட்டீர்கள். ஐந்தாம் இடம் என்பது சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு மனதில் நற்சிந்தனையைத் தோற்றுவிப்பார். தனிப்பட்ட முறையில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும்.

நிதி : ராகு, கேதுவின் சஞ்சார நிலையால் அதிக செலவினை சந்தித்து வருவீர்கள். இருப்பினும் தற்போது நிகழ உள்ள குருவின் அனுகூலமான சஞ்சார நிலை செலவுகளை கட்டுப்படுத்தும். அநாவசிய செலவுகள் சுபசெலவுகளாக உருமாறும். பிள்ளைகளின் பெயரில் சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு. மார்ச் மாதம் 21ம் தேதிக்குப் பிறகு புதிய சொத்து வாங்கும் முயற்சியில் இறங்கலாம். அதுவரை பொறுத்திருப்பது பொருள்விரயத்தைத் தடுக்கும்.
குடும்பம் : குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கான வாய்ப்புகள் கூடி வரும். வீட்டினில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். பிள்ளைகளின் வழியில் சுபநிகழ்ச்சிகளுக்கான வாய்ப்பு உருவாகும். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். பெற்றோரின் ஆதரவுடன் நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உடன்பிறந்தோருக்கு தேவையான உதவியைச் செய்வீர்கள்.

கல்வி : மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அக்கவுண்டன்சி, எகனாமிக்ஸ், காமர்ஸ், வரலாறு ஆகிய துறையைச் சார்ந்த மாணவர்களும், ரசாயனம், இயற்பியல், புவியியல் துறையைச் சார்ந்தவர்களும் சாதனைகள் புரிவார்கள். செய்முறைத் தேர்வின் போது அலட்சியத்தின் காரணமாக மதிப்பெண்களைக் கோட்டைவிடும் வாய்ப்புண்டு. கவனம் தேவை. உங்கள் வெற்றிக்கு ஆசிரியர்கள் பக்கபலமாய்த் துணையிருப்பார்கள்
 
பெண்கள் : குடும்ப விவகாரங்களை வெளியில் பேசுவதைத் தவிர்க்கவும். எளிதில் ஏமாறும் வாய்ப்பு உள்ளதால் பண விவகாரங்களை தனித்து கையாளுவது நல்லதல்ல. எந்த ஒரு விஷயத்தையும் கணவர் அல்லது குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையின் பேரில் செய்வது நல்லது. பிள்ளைகளின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையே இருந்த இடைவெளி காணாமல் போகும்.

உடல்நிலை:  டிசம்பர், ஜனவரி மாதங்களில் உடம்பின் மேற்தோலில் பனி மற்றும் குளிர் காரணமாக சரும நோய்கள் தோன்றலாம். ஒரு சிலர் கணுக்காலில் உண்டாகும் வெடிப்பின் காரணமாக வலியால் அவதிப்படுவர். மார்ச் 21 முதல் ஜென்ம ராசிக்கு வரும் கேது உங்கள் உடல்நிலையை சற்று சோதிப்பார். பித்த ரோகத்தால் அவதிப்படுபவர்கள் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இரும்புச்சத்து மிக்க காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும்.

தொழில் : பணியாளர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வின் பேரில் இடமாற்றத்தை சந்திக்க நேரலாம். முன்னேற்றம் கருதி இடமாற்றத்தினை ஏற்றுக் கொள்வது நல்லது. வெளிநாடு சம்பந்தமுடைய தொழில்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தோல், சிமெண்ட், ஸ்டேஷனரி, மளிகை சார்ந்த தொழில்கள் சிறப்பான முன்னேற்றம் காணும். சமையல் கலைஞர்கள், மருத்துவத்துறை சார்ந்தவர்கள், கட்டிடக் கலைஞர்கள் ஆகியோர் தங்கள் தொழிலில் சிறப்பான லாபத்தைக் காண்பர். தொழில்முறையில் உங்களது முழு முயற்சியினால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பரிகாரம் : ரங்கநாதப் பெருமாளை வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
     கருதி இடத்தால் செயின்.

சுவாதி : எண்ணுவது உயர்வு

குருவின் சிறப்புப் பார்வை ராசியின் மீது விழுவதால் மனதில் தோன்றும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் பரோபகார சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். குரு ஐந்தில் சென்று அமர்வதால் வரும் ஐந்து மாத காலத்தில் நல்ல நண்பர்கள் வந்து சேர்வார்கள். அர்த்தாஷ்டமச் சனியால் கண்டு வரும் தடங்கல்கள் வெகுவாகக் குறையும். மனதில் சந்தோஷம் குடிபுகும். சுக்ரனை ராசிநாதன் ஆகவும் ராகுவை நட்சத்திர அதிபதியாகவும் கொண்டிருக்கும் நீங்கள் பொழுதுபோக்கு அம்சங்களில் அதிக நாட்டம் கொள்வீர்கள். குருவின் பார்வை உங்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படச் செய்யும். உங்கள் கருத்துக்களில் உறுதியாய் நிற்பீர்கள்.
நிதி : வரவினை விட செலவுகள் கூடுவதாக உணர்வீர்கள். என்றாலும் குருவின் பார்வை அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்தி சுபசெலவுகளைத் தரும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களில் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் தோன்றும் பிரச்னைகளை நிதானத்துடன் அணுகி தீர்வு காண்பீர்கள். சேமிப்பினில் பெருத்த முன்னேற்றம் இல்லாவிட்டாலும் கையிருப்பு கரையாமல் பார்த்துக் கொள்வீர்கள்.

குடும்பம் : குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் கலந்திருக்கும். பிள்ளைகளின் வழியில் பெருமைபடத்தக்க சம்பவங்கள் நிகழும். குடும்பத்தில் வம்சம் விருத்தி அடைவதற்கான வாய்ப்புண்டு. வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் கவனம் தேவை. குடும்பப் பெரியவர்கள் உங்கள் கருத்துக்களை ஆமோதிப்பார்கள். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி வந்து சேராமல் போகலாம். உடன்பிறந்தோருக்கு எந்தவித தயக்கமுமின்றி உதவி செய்வீர்கள்.

கல்வி : மாணவர்கள் தங்களுக்கு உண்டாகும் மறதியினைப் போக்க தீவிர எழுத்துப்பயிற்சியில் இறங்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் உங்கள் எழுத்துவலிமை அதிகரிப்பதால் தேர்விற்கு முன்னதாக பல மாதிரித்தேர்வுகளை எழுதிப் பார்ப்பது நல்லது. கம்ப்யூட்டர் சயின்ஸ். அக்கவுண்டன்சி, காமர்ஸ், ஆடிட்டிங் போன்ற துறையைச் சார்ந்த மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். இக்கட்டான சூழலில் ஆசிரியரின் துணை உங்களுக்கு பக்கபலமாய் துணைநிற்கும்.

பெண்கள் : குடும்ப பிரச்னைகளை வெளியே சென்று பேசுவதால் தொல்லைகள் உண்டாகும். முன்பின் தெரியாத மாற்றுமொழி பேசும் பெண்களின் நட்பு அநாவசிய பிரச்னைகளை உருவாக்கும். ஜனவரியின் முற்பாதியில் கணவரோடு கருத்துவேறுபாடு தோன்றி மறையும். அவரது உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குரு பகவானின் பார்வை ஜென்ம ராசியின் மீது விழுவதால் குடும்பத்தினை மிகுந்த பொறுப்புடன் நடத்திச் செல்வீர்கள்.

உடல்நலம் : சரியான நேரத்திற்கு சரியான உணவு வகைகளை உட்கொள்வதன் மூலமே உங்களது ஆரோக்கியத்தினைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடல்நிலையில் தோன்றும் பாதிப்புகள் பிற்காலத்தில் பெரிய பிரச்னைகளை உருவாக்கலாம். உடல்நிலையில் தோன்றும் மாற்றத்தினை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியமாக இராமல் உடனுக்குடன் கவனித்து க்கொள்வது நல்லது. நரம்புத் தளர்ச்சி, வெர்ட்டிகோ, உடல்சோர்வு, இடுப்புவலி போன்ற பிரச்னைகள் சிரமத்தைத் தந்து கொண்டிருக்கும்.

தொழில் : உடன்பணிபுரிவோர்களுடன் ஒத்துப்போவது அவசியமாகிறது. டிசம்பர் இறுதி வரை தொழில் ரீதியாக சிரமத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். பணியாளர்கள் தற்காலிக இடமாற்றத்தினால் சிரமங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. ஆயினும்  பதவி உயர்வு உண்டாகும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்களுக்கு சிரமங்கள் உண்டாகும். வியாபாரிகள் வெளியில் இருந்து வர வேண்டிய கடன் பாக்கிகளை அதிகம் நிலுவையில் வைக்காமல் உடனுக்குடன் வசூலிப்பது நன்மை தரும். விவசாயம், உணவு தானிய வியாபாரம், ஓட்டல், ஸ்வீட் ஸ்டால், தண்ணீர் சம்பந்தப்பட்ட தொழில்கள், பெட்ரோலியப் பொருட்கள், கேஸ் ஏஜன்சி, மருந்து வியாபாரம், பூ வியாபாரம் போன்ற தொழில்களைச் செய்வோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரம் : செவ்வாய் தோறும் நாகாத்தம்மனை வழிபட்டு வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    இனிய உளவாக இன்னாத கூறல்
     கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.

விசாகம் 1, 2, 3ம் பாதம் :    நன்று கருது


 நவம்பர் 13 முதல் குருவின் சிறப்புப் பார்வையினைப் பெற உள்ளீர்கள். திரிகோண ஸ்தானம் ஆகிய ஐந்தாம் இடத்தில் அமரும் குருவினால் சாதுக்கள், சந்யாசிகள், அறிவிற் சிறந்த சான்றோர்களுடனான சந்திப்பு உண்டாகும். மனதில் சாந்தமும், வாழ்வினில் நிம்மதியும் காண்பீர்கள். தர்ம சாஸ்திரம் தொடர்பான விஷயங்களை அறிந்து கொள்வதில் நாட்டம் உண்டாகும். சுகத்தினைத் தரும் சுக்ரனை ராசிநாதன் ஆகக் கொண்டிருந்தாலும் தர்மநெறியைக் கற்பிக்கும் குருவை நட்சத்திர அதிபதியாகக் கொண்டிருப்பதாலும் இந்த நேரத்தில் குருவின் பார்வையைப் பெறுவதாலும் நேர்மையான வழியில் பயணித்து வெற்றி பெறுவீர்கள்.
நிதி : செலவுகளைச் சமாளிக்கும் வகையில் வரவு நிலை இருந்து வரும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். சேமிப்பு நிலையைப் பற்றி பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதே நேரத்தில் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் பண்டு ஆகியவற்றில் முதலீடு செய்பவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
குடும்பம் : குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்பினை உங்கள் முயற்சியால் முடிவிற்கு கொண்டு வருவீர்கள். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றி மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகள் தக்க தருணத்தில் கைகொடுக்கும். உடன்பிறந்த சகோதரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். உறவினர்கள் வழியில் உண்டாகும் கலகங்களை எவர் மனமும் கோணாது அழகாக சமாளித்து விடுவீர்கள்.

கல்வி : மாணவர்களின் அறிவுத்திறன் கூடும். கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஞாபக மறதித் தொந்தரவு முற்றிலும் அகலும். கூடுதலான எழுத்துப் பயிற்சியும், நண்பர்களோடு இணைந்து மேற்கொள்ளும் கூட்டுப் பயிற்சியும் அதிக நன்மை தரும். பள்ளி, கல்லுாரிகளில் நடைபெறும் போட்டிகளில் முன்னிலை வகிப்பார்கள். காமர்ஸ், எக்கனாமிக்ஸ், ஆடிட்டிங், அக்கவுண்டன்சி, கணிதம், மொழிப்பிரிவு துறை சார்ந்த மாணவர்கள் சிறப்பிடம் பெறுவார்கள்.

பெண்கள் : குடும்பப் பெரியவர்களின் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். வீட்டினில் தங்கம், வெள்ளிப் பொருட்கள் சேரும். வீட்டினை சுத்தமாக வைத்துக் கொள்வதில் சிறப்பு கவனம் கொள்வீர்கள். குடும்பத்தில் நடக்கும் விசேஷங்களின் போது உங்களது நிர்வாகத் திறன் வெளிப்படும். அண்டை வீட்டாருக்கு உதவி செய்வதில் மன நிம்மதி உண்டாகும். கணவரின் பணிகளுக்கு அவ்வப்போது தக்க ஆலோசனை வழங்குவீர்கள். பெரிய பொறுப்புகளை முழு மனதோடு செய்து முடித்து நற்பெயர் காண்பீர்கள்.

உடல்நலம்: டிசம்பர் 31 வரை உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. தைராய்டு, கொழுப்பு சார்ந்த பிரச்னைகள் உள்ளோர் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ருசியான தின்பண்டங்களையும், எண்ணெய்  பலகாரங்களையும் தவிர்ப்பது உடல்நலத்திற்கு நல்லது.

தொழில் : பணியாளர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். ஒரு சிலர் வேலை செய்யும் நிறுவனம் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பினை அடைவர். மருத்துவம், சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, கேட்டரிங், தரகுத் தொழில் செய்பவர்கள் குறிப்பிடத்தகுந்த லாபத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. தொழிலதிபர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் நன்மை அடைவார்கள். பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற சிறுதொழில் செய்வோர் பெருத்த முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரம் : வியாழன் தோறும் அரசமரத்தடி நாகரை வணங்குங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
     சொல்லில் பயன் இலாச் சொல்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar