Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் ... வீடுதேடி வரும் சபரிமலை பிரசாதம்: மூன்று வகை கட்டணங்களில் ஏற்பாடு வீடுதேடி வரும் சபரிமலை பிரசாதம்: ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை கோயில் வருமானம் ரூ.10 கோடியை கடந்தது
எழுத்தின் அளவு:
சபரிமலை கோயில் வருமானம் ரூ.10 கோடியை கடந்தது

பதிவு செய்த நாள்

29 நவ
2021
10:11

சபரிமலை: சபரிமலை வருமானம் ரூ.10 கோடியை கடந்தது. கடைகள் ஏலம் போகாததால் தேவசம்போர்டு மாற்று ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் சபரிமலையில் தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் வீதம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். முன்பதிவு செய்தவர்களில் 70 சதவீதம் வரைதான் வருகின்றனர். நடை திறந்த 11 நாட்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 238 பேர் தரிசனம் செய்துள்ளனர். அதிக பட்சமாக நவ.26 ல் 18 ஆயிரத்து 427 பேர் தரிசனம் நடத்தினர். அப்பம் ,அரவணை விற்பனை மற்றும் கடைகள் ஏலம் மூலம் இந்த நாட்களில் தேவசம்போர்டின் வருமானம் ரூ. 10 கோடியை கடந்துள்ளது. முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் தரிசனத்துக்கு வந்தால் வருமானம் மேலும் அதிகரிக்கும்.

மாற்று ஏற்பாடு: பல முறை ஏலம் விட்ட பின்னரும் கடைகளை எடுக்க வியாபாரிகள் தயாராக வில்லை. பக்தர்கள் கூட்டம் குறைவு, அவர்கள் சன்னிதானத்தில் தங்க முடியாது என்பதாலும் வியாபாரிகள் இணைந்து ஏலம் கேட்காமல் உள்ளனர். இதனால் தேவசம்போர்டு மாற்று ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. அரசு மற்றும் கூட்டுறவு அமைப்புகள் மூலம் கடைகளை திறப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுகுறித்து தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியதாவது:வியாபாரிகள் இணைந்து பேரம் பேசுவதை அனுமதிக்க முடியாது. பக்தர்கள் பாதிக்காமல் இருக்க அரசு ஏஜன்சிகள் மூலம் கடைகள் திறக்கப்படும். கழிவறைகளில் தொழிலாளர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் தேவசம்போர்டு நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை நியமிக்கும், என்றார். பத்தணந்திட்டையில் கேரள அரசு போக்குவரத்துக்கழகத்தின் கே.எஸ்.ஆர்.டி.சி.ஹப் என்ற திட்டத்தை அமைச்சர் வீணாஜார்ஜ் தொடங்கி வைத்தார். இதன்படி தொலை துாரங்களில் இருந்து பஸ்களில் பம்பைக்கு டிக்கெட்டு எடுத்து பயணிக்கும் பக்தர்கள் இங்கு இறங்கி நான்கு மணி நேரம் ஓய்வு எடுத்த பின்னர் அதே டிக்கெட்டில் பம்பைக்கு பயணிக்கலாம். அவர்கள் ஓய்வெடுக்க பத்தணந்திட்டை பஸ்ஸ்டாண்டில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இயக்கப்படும் பஸ்கள் வழியில் எங்கும் நிற்காமல் பம்பை செல்லும். இதற்காக 65 பஸ்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar