Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை கோயில் வருமானம் ரூ.10 கோடியை ... சபரிமலை அபிவிருத்தி திட்டங்களுக்கு பணம் திரட்ட தேவசம்போர்டு தீவிரம் சபரிமலை அபிவிருத்தி திட்டங்களுக்கு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
வீடுதேடி வரும் சபரிமலை பிரசாதம்: மூன்று வகை கட்டணங்களில் ஏற்பாடு
எழுத்தின் அளவு:
வீடுதேடி வரும் சபரிமலை பிரசாதம்: மூன்று வகை கட்டணங்களில் ஏற்பாடு

பதிவு செய்த நாள்

29 நவ
2021
12:11

சபரிமலை: திருவிதாங்கூர் தேவசம்போர்டுடன் இணைந்து தபால் துறை, சபரிமலை பிரசாதத்தை பக்தர்களின் வீடுகளில் கொண்டு சேர்க்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

மூன்று வகை கட்டணங்களில் இது அனுப்பப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏராளமான பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாத நிலை உள்ளது. இவர்களுக்கு ஆறுதலாக சபரிமலை பிரசாதம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு அரவணை மற்றும் அர்ச்சனை பிரசாதம் ரூ.450, நான்கு அரவணை, அர்ச்சனை பிரசாதம் ரூ.830, பத்து டின் அரவணை அடங்கிய பாக்கெட் ரூ.1510 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுவாமி பிரசாதம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் பக்தர்கள் பிரசாதம் பதிவு செய்யலாம். சன்னிதானம் தபால் அலுவலக அதிகாரிகள் தினமும் வரும் ஆர்டருக்கு ஏற்ப அரவணை மற்றும் பிரசாதம் பெற்று டிராக்டர் மூலம் பம்பை கொண்டு வருகின்றனர்.

பின்னர் இது திருவல்லா ஆர்.எம்.எஸ். அலுவலகத்திற்கு கொண்டு வந்து இங்கிருந்து விரைவு தபால் மூலம் சம்பந்தப்பட்ட பக்தர்களின் முகவரிக்கு அனுப்பப்படுகிறது.தயாராகும் அறைகள் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக சன்னிதானத்தில் உள்ள தேவசம்போர்டு கட்டடங்களில் உள்ள 500 அறைகளை நேற்று துப்புரவு தொழிலாளர்கள் சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர். பின்னர் கிருமி நாசினி தெளிக்கப்படும். அரசிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் பக்தர்களுக்கு அறைகள் வழங்கப்பட உள்ளது.

இதனால் மாலைக்கு பின்னர் வருவோர் சன்னிதானத்தில் தங்கலாம்.வெடி வழிபாடு சபரிமலையில் நேர்த்திக் கடனை நிறைவேற்றும் வகையில் வெடிவழிபாடு தொடங்கப்பட்டுள்ளது. அதிகாலை 4:00 முதல் மதியம் ஒரு மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை வெடிவழிபாடு நடத்தலாம்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar