சபரிமலை : ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தால் அது சபரிமலை சீசனை பாதிக்கும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு கவலை அடைந்துள்ளது.
சபரிமலை வருமானத்தை அடிப்படையாக கொண்டுதான் திருவிதாங்கூர் தேவசம்போர்டு செயல்படுகிறது. மூன்று ஆண்டுகளாக மண்டல மகரவிளக்கு சீசன் சரியாக நடைபெறாததால் தேவசம்போர்டு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அரசு மானியம் வழங்கினாலும் போதுமானதாக இல்லை. இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் ஓரளவு வருமானம் வர தொடங்கியது. கொரோனா குறைந்து வருவதால் நீலிமலை பாதையில் பயணம், சன்னிதானத்தில் எட்டு மணி நேரம் தங்க அனுமதி, நெய்யபிேஷகம் நடத்த அனுமதி போன்ற கூடுதல் தளர்வுகளை அனுமதிக்க தேவசம்போர்டு முயற்சித்து வந்தது. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலையில் கூடுதல் தளர்வுகளை எதிர்பார்க்கும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் வந்தால் அது சீசனை பாதிக்கும் என நேற்று நடந்த தேவசம் போர்டு கூட்டத்தில் பேசப்பட்டது. எனவே அரசின் இறுதி முடிவை பொறுத்துதான் சபரிமலை கூடுதல் தளர்வுகள் வரும் என தெரிகிறது.