தேனி : ஆரம்ப சுகாதார நிலையங்கள், தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஐயப்ப பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொது சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
அதிகாரிகள் கூறியதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்கு ஆர்.டி.பி.சி.ஆர்., சான்று தேவையில்லை. சபரிமலை செல்லும் பக்தர்கள் தரிசனத்திற்கான முன்பதிவு கூப்பன், 2 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர்., நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு செல்ல தெரிவித்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் ஐயப்ப பக்தர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மெகா முகாம்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். என, தெரிவித்தனர்.