புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று, பிரதோஷ வழிபாடு நடந்தது.கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று மாலை நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர், தேன் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.அதைத் தொடர்ந்து, நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பிரதோஷ வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை குரு சித்தானந்தா சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். பூஜைகளை தேவசேனாதிபதி குருக்கள் செய்தார்.