பதிவு செய்த நாள்
05
டிச
2021
07:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில், வைகுந்த ஏகாதசி பகல் பத்து 2- ம் நாள் இன்று (05.12.2021) ஸ்ரீ நம்பெருமாள் சவுரிக் கொண்டை , வைர அபயஹஸ்தம் , வைரகாதுகாப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை , பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்கருக்கு சேவை சாதிக்தார்.
பூலோக சொர்க்கம் என்ற பக்தர்களால் அழைக்கப்படும், திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா , திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. பகல் பத்து விழா தொடங்கி, 13ம் தேதி வரை, 10 நாட்கள் நடக்கிறது. பகல் பத்து 2- ம் நாள் இன்று (05.12.2021) ஸ்ரீ நம்பெருமாள் சவுரிக் கொண்டை , வைர அபயஹஸ்தம் , வைரகாதுகாப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை , பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்கருக்கு சேவை சாதிக்தார். 14ம் தேதி, அதிகாலை, 4:45 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலை திறந்து கடந்து செல்வார்.