Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் 1008 ... ராஜகோபால சுவாமி கோவிலில் யாக சாலை பூஜை துவக்கம் ராஜகோபால சுவாமி கோவிலில் யாக சாலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு கோயிலுக்கு திரும்பிய குன்றத்து யானை
எழுத்தின் அளவு:
ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு கோயிலுக்கு திரும்பிய குன்றத்து யானை

பதிவு செய்த நாள்

07 டிச
2021
10:12

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை 14 வயது தெய்வானை ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு நேற்று கோயிலுக்கு திரும்பியது. பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயிலில் இருந்த யானை அவ்வை உடல் நலக்குறைவால் 2012ல் இறந்தது. 2016இல் அசாமில் இருந்து உபயதாரர் மூலம் 9வயது யானை குட்டி கோயிலுக்கு வந்தது. அதற்கு கோயில் நிர்வாகம் சார்பில் தெய்வானை என பெயர் சூட்டப்பட்டது. கடந்த ஆண்டு யானை தாக்கியதில் பாகன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பின்பு யானை தெய்வானை 2020 ஜுன் மாதம் திருச்சி எம்.ஆர். பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கே 8 மாதங்கள் யானைக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பின்பு யானை தெய்வானை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு 10 மாதங்கள் பராமரிக்கப்பட்டது. நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் யானை தெய்வானைக்கு தீபாராதனை பூஜைகள் முடிந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. கால்நடை மருத்துவர்கள், சுப்பிரமணிய சுவாமி கோயில் பேஷ்கார் புகழேந்தி, யானை பராமரிப்பு எழுத்தர் நெடுஞ்செழியன், பணியாளர்கள் உதயகுமார், இருளப்பன், நாக பாண்டி ஆகியோர் உடன் வந்தனர். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பு யானை தெய்வானை திருப்பரங்குன்றத்திற்கு வந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோயில் துணை கமிஷனர் ராமசாமி: முதுமலையில் யானைகளை பராமரிப்பு பணி செய்த சிவகுமார் அவரது மகனும் தற்போது யானை தெய்வானையை பராமரிக்க பாகன்களாக அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர் குடும்பத்துடன் திருப்பரங்குன்றத்தில் தங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யானை தெய்வானை நல்ல நிலையில் உள்ளது என ஒரு மாதத்திற்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெய்வானையை பரிசோதித்த தமிழ்நாடு யானைகள் பராமரிப்பு உயர்மட்டக்குழு உறுப்பினர் டாக்டர் சிவகணேசன் தெரிவித்திருந்தார். யானை தெய்வானை நல்ல உடல் நிலையில் உள்ளது. என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar