Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நளதமயந்தி பகுதி-7 நளதமயந்தி பகுதி-9 நளதமயந்தி பகுதி-9
முதல் பக்கம் » நளதமயந்தி
நளதமயந்தி பகுதி-8
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜன
2011
03:01

அப்போது தான் இன்னொரு சிக்கலும் எழுந்தது.தன் விஷயம் ஒருபக்கம் இருக்கட்டும்! தேவர்கள் அவர்கள் பாட்டுக்கு, தமயந்தியிடம் தங்களுக்காக தூது செல் என சொல்லிவிட்டார்கள். தமயந்தி கன்னிமாடத்தில் இருப்பாள். அவளைச் சந்திக்க வேண்டுமானால், பெரும் கட்டுக்காவலை மீறிச் செல்ல வேண்டியிருக்குமே! என்ன செய்யலாம்? என்று யோசித்தான் நளன். இந்திரனிடமே அதுபற்றி கேட்டான். தேவேந்திரா! உனக்காக நான் தூது போக தயாராக இருக்கிறேன். ஆனால், அரண்மனைக் கன்னிமாடத்தில் காவல் பலமாக இருக்குமே! அதை எப்படி கடந்து செல்வேன்? என்றான். நளனே! நீ தமயந்தியைத் தவிர யார் கண்ணிலும் பட மாட்டாய் எனஉறுதியளிக்கிறேன். வெற்றியுடன் போய் வா, என்று வழியனுப்பி வைத்தான்.இதனால் தைரியமடைந்த நளன் தமயந்தி இருக்கும் குண்டினபுரம் அரண்மனைக்குச் சென்றான். அந்த ஊர் தான் விதர்ப்பநாட்டின் தலைநகரம். ஊருக்குள் நுழைந்ததும் அசந்து விட்டான். ஊரின் அழகு அவனை மயக்கியது. அந்த ஊரிலுள்ள வீடுகள் மனைசாஸ்திரப்படி அரண்மனை போல் கட்டப்பட்டிருந்தன. தெருக்கள் நேராக மிக நீண்டதாக இருந்தன. நகரின் அழகை ரசித்தபடியே, தன் கனவுக்கன்னியிடம், தான் செய்யப்போகும் காதல் தியாகத்தைப் பற்றி பேசுவதற்காக நளன் கன்னிமாடம் சென்று சேர்ந்தான். அவனை முன் பின் பார்த்திராவிட்டாலும், கன்னிமாடத்திற்குள் புகுந்து தன்னருகே வருமளவு தைரியம் நளனைத் தவிர யாருக்கு வரும் என்று கணித்துவிட்ட தமயந்தியின் விழிகள் நளனின் விழிகளைச் சந்தித்தன. குவளை மலரும், தாமரை மலரும் ஒன்றுக்கொன்று பார்த்தது போல அமைந்ததாம் அந்த சந்திப்பு. தமயந்தியின் கண்கள் குவளை போலவும், நளனின் கண்கள் தாமரை போலவும் இருந்தன. கண்கள் கலந்ததும் காதல் ஊற்றெடுத்தது.

நளனின் பேரழகு தமயந்தியை பைத்தியம் போல் ஆக்கிவிட்டது. ஒரு கட்டத்தில், அவனை அப்படியே அணைத்துக் கொள்ளலாமா என்று கூட தோன்றியது. ஆசை வெட்கத்தை வெல்லப் பார்த்தது. ஆனால், பெண்மைக்கே உரிய நாணம் அவளைத் தடுத்துவிட்டது. அதே நேரம் அன்னம் சொன்ன அடையாளங்களால் அவன் நளன் தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும், கண்களில் ஆனந்தக்கண்ணீர் துளிர்த்தது.அப்போது, அவள் தன் பவளவாய் திறந்தாள்.நீங்கள் யார்? அரண்மனையின் கட்டுக்காவலை மீறி கன்னிமாடத்துக்கே வந்துவிட்டீர்களே! <உங்களை இங்கே அனுமதித்தது யார்? ஒருவேளை காவலர்கள் கண்ணில் படாமல் மாயாஜாலம் நிகழ்த்தி வந்தீர்கள் என்றால், ஒருவேளை நீங்கள் தேவலோகத்தைச் சேர்ந்தவரோ? உண்மையைச் சொல்லுங்கள், என்றாள் மெல்லிய குரலில்.குயில் போல் இருந்தது அவளது தேன்குரல்.தமயந்தி! நீ நினைப்பது சரியே! நான் தான் நளன். உன்னை மணம் முடிக்கவே மற்ற அரசர்களையெல்லாம் முந்திக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். ஆனால், இங்கு வந்ததும் நிலைமை மாறிவிட்டது. உன்னை மணம் முடிக்க இயலாத நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன், என்றதும், தமயந்தியின் ஆனந்தக்கண்ணீர் சோக நீராய் மாறியது.மாமன்னரே! ஏன் அப்படி சொல்கிறீர்கள்? காணாமலே காதலித்தவர்கள் நாம். அன்னம் தங்களைப் பற்றி சொன்ன அடுத்த கணமே, என் இதயம் உங்கள் இதயத்துடன் சங்கமித்து விட்டது. இதயமில்லாதவளாய் நிற்கும் என்னிடம், இரட்டை இதயத்தைக் கொண்டுள்ள நீங்களா இப்படி பேசுகிறீர்கள்? அப்படி என்ன நிர்ப்பந்தம்? என்றாள் அந்த பைங்கொடி.தமயந்தி! நான் வரும் வழியில் இந்திரன் முதலான தேவர்களைக் கண்டேன். தேவலோகத்தில் சுகத்தைத் தவிர வேறு எதையுமே அனுபவிக்காத அந்த சுகவாசிகள், உன் பேரழகு பற்றிக் கேள்விப்பட்டு, உன்னை மணம் முடிக்க இங்கு வந்துள்ளார்கள். அதிலும், இந்திரன் உன் மேல் உயிரையே வைத்திருக்கிறார். உன்னையும், என்னையும் பிரிக்க முடியாது என்று தெரிந்து கொண்ட அவர், என்னையே தூது அனுப்பினார். நானும் அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விட்டேன்.

என் வாக்கைக் காப்பாற்றும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறேன். நீ அவருக்கு மாலை அணிவித்து மணாளனாக ஏற்றுக்கொள். பூலோக ராணியாக வேண்டிய நீ, தேவலோக ராணியாகப் போகிறாய், என்றான்.கண்ணீர் சிந்த நின்ற தமயந்தி, மன்னரே! உங்கள் நிலையைப் புரிந்து கொண்டேன். ஆனால், ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இந்த தமயந்தி உங்களைத் தவிர யாருக்கும் சொந்தமாக மாட்டாள். இந்த சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டதே உங்களுக்காகத் தான். நீங்கள் வந்ததும், உங்களை அடையாளம் கண்டு மாலை அணிவிக்கலாம் என இருந்தேன். ஆனால், இப்போது இப்படி ஒரு சிக்கலில் நீங்கள் மாட்டியிருக்கிறீர்கள் என்பதை அறிந்து வேதனைப்படுகிறேன். நளமகாராஜரே! தேவர்களுடன் இணைந்து சுயம்வர மண்டபத்துக்கு வாருங்கள்,  என்ற அந்த அழகுப்பாவை அங்கிருந்து புறப்பட்டாள்.நளனும் அவளிடம் விடைபெற்று தேவர்களிடம் வந்து சேர்ந்தான். இந்திரனிடம் நடந்ததைச் சொன்னான். தேவர்கள் மகிழ்ந்தனர். தமயந்தி தங்களை மறுக்கவில்லை என்பதை அறிந்து ஆறுதலடைந்தனர். அதே நேரம், சுயம்வர மண்டபத்துக்கு நளனை அவள் வரச்சொல்லியிருக்கிறாள் என்ற தகவல் அவர்களுக்கு நெருப்பாய் சுட்டது. இருப்பினும், தங்களுக்காக, தன் காதலையே தியாகம் செய்ய முன்வந்த நளனுக்கு ஒரு வரத்தை அளித்தனர்.நளனே! நீ செய்த தியாத்துக்காக ஒரு வரத்தை அளிக்கிறோம். உணவு. தண்ணீர், நகைகள், ஆடைகள், மலர் மாலை, நெருப்பு ஆகியவற்றை நீ எந்த இடத்தில் இருந்தாலும் நினைத்தவுடன் அவை கிடைக்கும் சக்தியை அளிக்கிறோம், என்றனர். மறுநாள், சுயம்வர மண்டபத்துக்கு அங்கு வந்துள்ள அரசர்கள் அனைவரும் வந்து சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அனைத்து நாட்டு அரசர்களும் புறப்பட்டனர்.

 
மேலும் நளதமயந்தி »
temple news

நளதமயந்தி பகுதி-1 டிசம்பர் 21,2010

தர்மராஜா சிந்தனையுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.எதற்காக சூதாடினோம், எதற்காக நாட்டையும், தம்பியரையும், ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-2 டிசம்பர் 21,2010

அவர் அந்த காட்டுக்குள் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த போது தான், ஆகுகனைச் சந்தித்தார். முன் பின் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-3 டிசம்பர் 21,2010

முற்றும் துறந்தவர் அந்த முனிவர். அவரது உயிர் இருந்தாலும், போனாலும், யாரும் கவலைப்படப் போவதில்லை. அவர் ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-4 டிசம்பர் 21,2010

அரசாட்சி அருளாட்சியாக இருந்தால் எந்த நாட்டிலும் இது சாத்தியம். கோழியைப் பார்த்ததும் காலையில் விழிக்க ... மேலும்
 
temple news

நளதமயந்தி பகுதி-5 டிசம்பர் 21,2010

சொல்கிறேன், கேள், என்ற அன்னம், நளனே! இந்த உலகிலேயே அழகாக நடை பயில்பவர்கள் நாங்கள் தான் என்று இறுமாப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar