Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
திருச்செந்தூரில் மூலவரை தங்க அங்கி அணிவித்து வழிபடும் முறை மீண்டும் அமல்!
ஜூலை 09,2012
அ-
+
Temple images

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில், பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து, வழிபடும் முறை மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது. இக்கோவிலில், குறிப்பிட்ட நாட்களிலும், பக்தர்கள் கட்டணம் செலுத்தும் போதும், மூலவர் சுப்பிரமணியர், உற்சவர் சண்முகர், பரிவார தெய்வங்களுக்கு, தங்க அங்கி, வைர வேல், அணிகலன்கள் அணிவிக்கப்படும் முறை இருந்தது. ஆனால், பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து வழிபடும் முறை, கடந்த தி.மு.க., ஆட்சியில், திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கு, பக்தர்கள் தொடர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முதல்வர் ஜெ., உத்தரவுப்படி, பக்தர்கள் கட்டணம் செலுத்தி, மூலவருக்கு தங்க அங்கி அணிவித்து வழிபடும் முறை, மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது. நேற்று, இக்கோவிலில், சுவாமி தரிசனம் செய்த அறநிலையத் துறை அமைச்சர் ஆனந்தன், இதை தெரிவித்தார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.