காரியாபட்டி: காரியாபட்டி கள்ளிக்குடி ரோட்டில் அமைந்துள்ள சக்திமாரியம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. முதல்நாள் பூர்ணாஹூதி, அபிஷேகம், தீபாராதனையுடன் துவங்கியது. இரண்டாம்நாள் விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், என தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பத்தாம் நாள் நான்காம் கால யாக பூஜை, கஜபூஜை, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு, ராஜகோபுர விமான கும்பாபிஷேகம், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா அபிஷேகம், அம்பாள் திருவீதி உலா வந்து பொது மக்களுக்கு அருள் ஆசி வழங்கினார். ஆயிரக்கணக்கான பக்தர்கர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் குருக்கள் வேத மந்திரங்கள் ஓதினர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.