Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாளை வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் ... வைகுண்ட ஏகாதசி விழா: சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வைகுண்ட ஏகாதசி விழா: சுவாமி தரிசனம் ...
முதல் பக்கம் » சிறப்பு செய்திகள்
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவள்ளி உற்சவம்
எழுத்தின் அளவு:
கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கூடாரவள்ளி உற்சவம்

பதிவு செய்த நாள்

12 ஜன
2022
11:01

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று கூடாரவள்ளி நடந்தது.

மார்கழி மாதத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள இறைவனையே மணந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், 27 நாட்கள் விரதம் இருந்து, ஆண்டாள் தனது நோன்பை நிறைவு செய்யக்கூடிய நிகழ்வையே கூடாரவள்ளி என, அழைக்கின்றோம். நிகழ்வையொட்டி, மார்கழி மாதம், 27ம் தேதி அனைத்து பெருமாள் கோவில்களிலும், கூடாரவள்ளி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார நிகழ்ச்சி நடைபெறும். இதில், ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை அலங்காரங்கள் செய்யப்படும். நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, பெருமாளையும், ஆண்டாள் நாச்சியாரையும் வழிபடுவது வழக்கம். இந்நாளில் ஆண்டாள், ஸ்ரீரங்கம் கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டார் என, புராணங்கள் கூறுகின்றன.

பெரியநாயக்கன் பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கூடாரவள்ளி நிகழ்ச்சியில், பெருமாள், தாயார்களுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், மார்கழி மாத விரதத்தை நிறைவு செய்யும் வகையில், பெருமாளுக்கு பக்தர்கள் படையலிட்டு, வழிபட்டு, திவ்யபிரபந்த பாடல்களை பாடினர். நிகழ்ச்சியில், பஜனைக் கோஷ்டியினர், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் சிறப்பு செய்திகள் »
temple news
காரமடை; கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம நம்பெருமாளுக்கு சாற்றுமுறை திருஷ்டி ஆரத்தி பூஜை நடைபெற்றது.ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இராப்பத்து ஏழாம் நாளில், பரமபத வாசல் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலைசொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் ... மேலும்
 
temple news
சென்னை : திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டதுசென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar