Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கருட வாகனத்தில் சொர்க்கவாசல் ... அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும்: காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்த்து அனைவருக்கும் மகிழ்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் திரண்ட பாதயாத்திரை பக்தர்கள்: லட்சக்கணக்கில் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பழநியில் திரண்ட பாதயாத்திரை பக்தர்கள்: லட்சக்கணக்கில் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
03:01

பழநி: பழநி தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் கடந்த 4 நாட்களாக அதிக அளவில் பழநியில் வருகை புரிகின்றனர். அடிவாரம் பகுதி ஆக்கிரமிப்பால் அவதிப்படுகின்றனர்

பழநியில் தைப்பூச திருவிழா ஜன.12ல் பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க வழிகாட்டு நெறிமுறை படி (ஜன.,14,) முதல் ஜன., 18 வரை வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதி அரசு இல்லை என அறிவித்ததுள்ளது. பாதயாத்திரையாக பக்தர்கள் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து அதிக அளவில் வருகை புரிகின்றனர். இதனால் பழநி நகரம் திக்குமுக்காடியது. கோயில் தரிசனம் வழியில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் சிரமம் அடைந்தனர்.

ஆக்கிரமிப்பு: பழநி மலைக்கோயில் அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அலகு குத்தி, காவடிகள், பறவைக் காவடி, தீர்த்த குடம் எடுத்து வரும் பக்தர்கள் அந்த வீதிகளில் நடந்து செல்ல மிகவும் சிரமம் அடைந்தனர்.

போலி வழிகாட்டிகள்: பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் முடி எடுக்கவும், கோயிலுக்குச் செல்ல சரியான பாதையை கண்டறியவும் முயலும்போது போலி வழிகாட்டிகள் அவர்களை மறித்து பணம் பறிக்க முயல்கின்றனர். ஏமாறும் பக்தர்கள் பணத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்: கூட்டம் அதிகமாக உள்ளதால் கிரிவீதி பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமம் அடைந்தனர் இதனால் போக்குவரத்து நெரிசல் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. குளத்து ரோடு, பூங்கா ரோடு, இடும்பன் கோயில் இட்டேரி வீதி உள்ளிட்ட பகுதிகளில் நோ பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் நிறுத்தி சென்றதால் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது.

பேருந்துகளில் நெரிசல்: பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சொந்த ஊர் திரும்பி செல்ல பஸ்களில் ஏறி இடம்பிடிக்க பஸ் ஸ்டாண்ட் வாயில் பகுதிகளில் குவிந்தனர். பெரும்பாலும் பேருந்துகளில் அதிக கூட்டத்துடன் பயணித்தனர்.

சமூக விலகல் கேள்விக்குறி: நாளொன்றுக்கு இரண்டு லட்சத்திற்கு மேல் மலைக்கோயிலுக்கு பக்தர்கள் சென்று தரிசனம் செய்து திரும்புகின்றனர். கோயில் நிர்வாகம் பக்தர்களை முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தியுள்ள நிலையில் அதிக கூட்டத்தினால் சமூகவிலகல் கேள்விக்குறியாகியுள்ளது. போலீசார், கோயில் நிர்வாகம் ஒத்துழைப்பு: போலீசார் பக்தர்களுக்கு தகுந்த வழிகாட்டிகளாகவும் கூட்டம் அதிகம் சேரும் போது அவர்களை தடுத்து நிறுத்தி குழுவாக மலைக்கோயிலுக்கு அனுப்பினர் இதனால் பக்தர்கள் கூட்டம் மலைக்கோயிலில் கட்டுப்படுத்தப்பட்டது. கோயில் நிர்வாகத்தினர் வரிசையில் காத்திருந்து வரும் வரும் பக்தர்களை விரைவாக தரிசனம் செய்து செல்லவும், மலைக்கோயிலில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar