Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் கோவிலில் ரூ.50 ... வடபழநி ஆண்டவர் கோவிலின் தூண்களில் பேசும் பொற்சிற்பங்கள் வடபழநி ஆண்டவர் கோவிலின் தூண்களில் ...
முதல் பக்கம் » வடபழனி கும்பாபிஷேகம் » செய்திகள்
புராண ஓவியங்களால்... மிளிரும் வடபழநி ஆண்டவர் கோவில்
எழுத்தின் அளவு:
புராண ஓவியங்களால்... மிளிரும் வடபழநி ஆண்டவர் கோவில்

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
10:01

சென்னை: முருக பெருமானின் வரலாற்றை விளக்கும் ஓவியங்களால், வடபழநி ஆண்டவர் கோவில் மிளிருகிறது.

சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 23ம் தேதி, அரசின் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரண்டு ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் மட்டுமல்லாமல், பல புதிய பணிகள் நடந்துஉள்ளன. அவற்றில், கோவிலின் தல புராணத்தையும், முருகனின் வரலாற்றையும் விளக்கும் வர்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதும், புதிதாக உற்சவர் மண்டபம் கட்டியுள்ளதும் முக்கியமானதாகும்.தமிழகத்தின் முக்கிய கோவில்களில் ஒன்றாக உள்ள வடபழநி ஆண்டவர் கோவில் பற்றியும், அதன் வரலாறு பற்றியும் அறிந்து கொள்வதில், பக்தர்கள் பெரிதும் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக, கோவிலின் தெற்கு நுழைவுப்பகுதியில், வடபழநி முருகன் கோவில் உருவாகிய தல புராண வரலாறு, 12 ஓவியங்களில் அழகுற வரையப்பட்டு உள்ளது.

பக்தர்கள் கோவிலுக்குள் நுழையும்போது, அவர்கள் கண்ணில்படும்படியாக வரையப்பட்டுள்ள இந்த ஓவியங்கள் பற்றி பெரியவர்கள் மட்டுமின்றி குழந்தைகளும் புரிந்து கொள்ளும்படியான, எளிமையான தமிழில் விளக்கமும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பூரிப்பு ஏற்படுவது நிச்சயம்.இதே போல், கோவிலின் வடக்கு பக்கம் பயனற்று இருந்த சுவரில், முருகப்பெருமானின் வரலாறான கந்த புராணம் எழிலுடன் வரையப்பட்டு உள்ளது. கி.பி., 12ம் நுாற்றாண்டில் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமரக் கோட்டத்தின் அர்ச்சகர் கச்சியப்ப சிவாசாரியார்.

குமரக் கோட்டத்து முருகக்கடவுளுக்கு நாள்தோறும் பூசனை செய்த மெய்யன்பில், வடமொழிப் புராணத்தின் சிறப்பினைத் தமிழ்கூறு நல்லுலகம் அறியும்படி, கந்த புராணத்தை இயற்றினார். 135 படலங்களையும், 10 ஆயிரத்து 345 பாடல்களையும் கொண்ட முருகப்பெருமானின் வரலாற்றை முறையாகவும், முழுமையாகவும் கூறும் கந்த புராணத்தின் சாறு பிழிந்து தந்தது போல, இந்த ஓவியங்கள் இங்கு அமையப் பெற்றுள்ளன, கும்பாபிஷேகத்தன்றும், அதன் பிறகும் வரக்கூடிய பக்தர்கள், இந்த வர்ண ஓவியங்களை பார்த்து மகிழப்போவது நிச்சயம். புதிய கொடிமரம் பிரதிஷ்டைவடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவில் முன்புறம், 36 அடி உயர புதிய கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறப்பு பூஜைக்கு பின்னர், கிரேன் உதவியுடன் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

 
மேலும் வடபழனி கும்பாபிஷேகம் செய்திகள் »
temple news
சென்னை: சென்னை வடபழநி ஆண்டவர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை அடுத்து, தொடர்ந்து 48 நாட்கள் ... மேலும்
 
temple news
சென்னை: வட பழநி ஆண்டவரை தரிசிக்க இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சென்னை வடபழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருகல்யாண வைபவம் நடந்தது.வடபழநி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழநி ஆண்டவர் கோவிலில், 14 ஆண்டுகளுக்கு பின் பிரமாண்ட திருப்பணிகள் முடிந்த நிலையில், அனைத்து ... மேலும்
 
temple news
சென்னையில் வடபழநி ஷேத்ரத்தில் அமைந்துள்ளது வடபழநி ஆண்டவர் கோவில். இக்கோவிலுக்கு, 2007ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar