ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கைலாசநாதர் கோவில் சுப்பிரமணியர் சன்னதியில், தைப்பூசத்தை முன்னிட்டு சுப்பிரமணியருக்கு, சந்தனம் குங்குமம், பால், பன்னீர், உள்ளிட்ட பல்வேறு வகையான, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.