செட்டிப்பட்டு முருகன் கோவிலில் தைப்பூச பால் காவடி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஜன 2022 06:01
திருக்கனுார் : செட்டிப்பட்டு முருகன் கோவிலில் 50ம் ஆண்டு தைப்பூச பால் காவடி விழா நேற்று நடந்தது.திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 50ம் ஆண்டு தைப்பூச பால் காவடி விழா நேற்று நடந்தது.காலை 7:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றங் கரையிலிருந்து கரகம், பால்காவடி எடுத்து வரப்பட்டது.10:30 மணிக்கு மேல், வேண்டிக்கொண்ட பக்தர்கள் மஞ்சள் இடித்தல், மிளகாய் பொடி அபிஷேகம், அக்னி சட்டி எடுத்தல், ஆகாய மாலை அணிதல் ஆகிய நேர்த்தி கடன் செலுத்தினர். இதேபோல், கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, தமிழகப் பகுதியான புதுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தைப்பூச விழா நடந்தது.