மேட்டுப்பாளையம்: காரமடை அருகே உள்ள படியனூர் கிராமத்தில், மிகவும் பழமைவாய்ந்த பழநி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில், தண்டாயுதபாணியாக, கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம் அன்று இக்கோவிலில், தேரோட்டம் நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, தேரோட்டம் நடைபெறவில்லை. தைப்பூசத்தை முன்னிட்டு பழநி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் முடிந்த பின்பு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றப்பட்டன.