பழநி: பழநி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் நாளை தெப்பதேர் நடைபெறும்.
பழநி, தைப்பூசத் திருவிழா, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி கோயிலில் ஜன.12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஜன.17ல் வள்ளி,தெய்வ நாயகி அம்மன் சமேத முத்துக்குமார சுவாமி, திருக்கல்யாணம் நடைபெற்றது. ஜன.,18ல் மாலை சிறுதேரில் சுவாமி கோயில் பிரகாரத்தில் தேரோட்டம் நடைபெற்றது. மலைக்கோயில் அடிவாரத்தில் காவடிகளுடன் பாதயாத்திரையாக பக்தர்கள் வருகின்றனர். ஆட்டம் பாட்டத்துடன் தைப்பூசதை கொண்டாடினர். திருவிழாவில் அனைத்து நாட்களிலும் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் திரு னஉலா நடைபெற்றது. பத்தாம் நாளான (ஜன.21) நாளை இரவு 7:00 மணிக்கு தெப்பத்தேர் நடைபெறும். இரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் உற்சவம் நிறைவு பெறும். இந்நிகழ்ச்சியில் கோவிட்-19 பரவல் கட்டுபாடுகளின் படி பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.