பழநி மலைக்கோயில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2022 06:01
பழநி: பழநி மலைக்கோயில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், லிப்ட், நாதமணி மண்டபம், பெரியநாயகி அம்மன் கோயிலில் அன்னதான கூடம் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றபட்டு முதல்வர் ஸ்டாலின் காணோலி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
பழநி மலைக்கோயில் வரும் பக்தர்களின் குடிநீர் வசதியை அதிகரிக்க தேவை ஏற்பட்டுள்ளது. பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து கோயில் நிர்வாகத்திற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு தனி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ 22 கோடியே 72 லட்சம் ஆகும். மேலும் மலைக்கோயிலில் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்ல ரூ. 24 லட்சத்தில் லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது. கால பூஜை நேரங்களில் மணியோசை எழுப்ப ரூ. 27.50 லட்சத்தில் மணிமண்டபம் மலைக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. பெரியநாயகியம்மன் கோயிலில் புதிய அன்னதானக் கூடம் ரூ 58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இவற்றை நேற்று காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் பழனியில் இந்நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி வேலுச்சாமி, பழநி எம்.எல்.ஏ செந்தில்குமார், திண்டுக்கல் கலெக்டர் விசாகன், கோயில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் செந்தில்குமார், டி.எஸ்.பி. சத்யராஜ் உற்பட பலர் பங்கேற்றனர்.