Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரசு, ஆன்மீக விழாக்களில் குருமகா ... சீர்காழி சட்டநாதர் கோவிலில் பாலாலயம் சீர்காழி சட்டநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: நாளை முதல் 3 நாட்கள் அனுமதியில்லை
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்: நாளை முதல் 3 நாட்கள் அனுமதியில்லை

பதிவு செய்த நாள்

20 ஜன
2022
06:01

திருத்தணி: திருத்தணி முருகன் கோவில், ஐந்து நாட்களுக்கு பின், நேற்று திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.  திருத்தணி முருகன் கோவில் மற்றும் அதன், 28 உபகோவில்கள் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக அரசு அறிவிப்பின்படி கடந்த, 14ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை ஐந்து நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் பக்தர்கள் இன்றி தினசரி நடக்கும் நித்ய பூஜைகள் நடந்து வந்தன.


இந்நிலையில், ஐந்து நாட்களுக்கு பின், நேற்று முருகன் கோவில் திறந்து காலை6:00 மணி முதல், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைரஆபரணங்கள் அணிவித்து தீபாராதனைநடந்தது. நேற்று முன்தினம் தைப்பூச விழா நடந்த போது பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லாததால் நேற்று வழக்கத்திற்கு மாறாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே மலைக்கோவிலில் குவிந்து மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் காவடிகளுடன் வந்தும் வழிபட்டனர். பொது வழியில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதேபோல் சிறப்பு கட்டண தரிசனத்திலும் திரளான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இன்று, ஒரு நாள் மட்டுமே முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் அரசு அறிவிப்பின்படி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதியில்லை என்பதால் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் இன்று ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில் திருச்சூர் வடக்குநாதர் கோவில். இங்கு எல்லா ஆண்டு சித்திரை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் ஷீரடி சாய்பாபா கோயிலில் சாய்பாபா பிறந்தநாள் விழா மற்றும் ராம நவமி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் பணம் மற்றும் நகை என காணிக்கையை கொட்டி ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாதம் ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar