மதுரை: மதுரையில் மீனாட்சி அம்மனின் ஜென்ம நட்சத்திரமான தை மகத்தை முன்னிட்டு இம்மையில் நன்மை தருவார் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமாவ பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து, சுவாமியை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.