சோழவந்தான்: சோழவந்தான் படித்துறை ஸ்ரீவரத விநாயகர் கோயிலில் உலக நன்மைக்காக சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் விலக, மக்கள் ஆரோக்கியமாக வாழ சிறப்பு அபிஷேக ஆராதனைகளை பட்டர் கார்த்திகை செய்தார். ஏற்பாடுகளை மலையாளம் கிருஷ்ணய்யர் டிரஸ்ட் பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகளை கோயில் அறங்காவலர் கோபிநாத் செய்தார்.