திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் மா காப்பு உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜன 2022 12:01
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் உலக நன்மை வேண்டி பெருமாளுக்கு மா காப்பு சாற்றும் உற்ஸவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு பெருமாளுக்கு மா காப்பு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகளை பாலாஜி பட்டர் செய்தார். உபயதாரர் சந்தானகிருஷ்ணன் குடும்பத்தினர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று சந்தன காப்பு உற்ஸவம் நடக்கிறது.