பதிவு செய்த நாள்
26
ஜன
2022
10:01
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி, முருகன், வள்ளி, தெய்வானை திருமணக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஜோதிபுரத்தில் புதிதாக பாலமுருகன், ஜோதி விநாயகர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவையொட்டி, முருகன், வள்ளி, தெய்வானை திருமண நிகழ்வு நடந்தது. இதில், திருமண கோலத்தில், மலர் அலங்காரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி, தொடர்ந்து, 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.