சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜன 2022 05:01
சிதம்பரம்: குடியரசு தினத்தையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் ராஜகோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின விழாவில் சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ வீதி ராஜகோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட குடியரசு தினத்தை முன்னிட்டு பொது தீட்சிதர்கள் சார்பில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக பொது தீட்சிதர்கள் சார்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு தேசியக்கொடி வெள்ளி தாம்பாளத் தட்டில் வைத்து சிறப்பு அபிஷேகமும் மற்றும் தீபாராதனை செய்து . அதனைத் தொடர்ந்து தட்டில் வைத்த தேசியக்கொடியை மேளதாளங்கள் முழங்க கிழக்கு கோபுரத்திற்கு பொது தீட்சிதர்கள் எடுத்துச் சென்றனர். பின்னர் கீழவீதி ராஜ கோபுரத்தின் மேல் ஏறி உச்சியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கடந்த 1950 ஆம் ஆண்டிலிருந்து இந்த வழக்கம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.