பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4 கோடியே 14 லட்சம் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையில் ஜன.24,25,27 ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் (ஜன.27) நேற்று எண்ணிக்கையில் காணிக்கையாக 260 கிராம் தங்கமும், 5 ஆயிரத்து 493 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 94 லட்சத்து 85 ஆயிரத்து 190 மற்றும் 22 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது.
மூன்று நாட்கள் எண்ணிக்கையில் மொத்தம் 730 கிராம் தங்கமும், 22 ஆயிரத்து 101 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ .4 கோடியே 14 லட்சத்து 45 ஆயிரத்து 630 மற்றும் 141 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.