கடவுள் முருகனுக்கு மூன்றாவது பொண்டாட்டி: சிறுவன் வாக்குறுதி வைரலாகும் வீடியோ
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2022 05:01
பெரம்பலுார்: தன்னை அடித்த ஆசிரியருக்கு கொரோனா வரவழைத்தால் மூன்றாவது பொண்டாட்டி கட்டி வைப்பதாக சிறுவன் ஒருவன் கடவுள் முருகனிடம் வேண்டுதல் நடத்தும் வீடியோ தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், சிறுவன் ஒருவன் கோவிலில் கடவுள் முருகப்பெருமான் சிலை முன் கீழே படுத்துக்கொண்டு, ஸ்கூலுக்கு போனா வர்ற போறவங்களெல்லாம் அடிக்கிறாங்க முருகா. எனக்கு நடந்த கொடுமைய நீயே கேளு முருகா. எங்க சார் ஒருத்தரு ஏ.பி.சி.டி., மொத்தம் எத்தனை எழுத்துன்னு கேட்டாரு (விரல்களை விட்டபடி, அதற்கு நான் ஏ.பி.சி.டி., மொத்தம் நான்கு எழுத்துன்று சொன்னேன் முருகா. அதற்கு என்ன அப்படி போட்டு அடிக்கிறான் முருகா. அந்த ஸ்கூல்ல நான் இருக்கணும் இல்ல அந்த சார் இருக்கணும். எனக்காக ஒன்று மட்டும் பண்ணு முருகா. இரு முருகா பக்கத்துல வந்துடுறேன். என்ன அடிச்சான்ல அந்த சாரு அவனுக்கு மட்டும் கொரோனா வரவச்சுடு முருகா. நான் சொன்னது மட்டும் செஞ்ச உனக்கு மூனாவது பொண்டாட்டி கட்டி தருவேன் என்று வேண்டுகிறான். சிறுவனின் இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பெரம்பலுார் மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் உள்ள முருகன் கோவிலில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.