பதிவு செய்த நாள்
17
ஜூலை
2012
10:07
பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடி ரூபாயை எட்டியது. உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது. ரொக்கம் 99 லட்சத்து 41 ஆயிரத்து மூன்று ரூபாய். தங்கம் 523 கிராம். வெள்ளி 4 ஆயிரத்து 80 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளின் கரன்சி 353. தங்கத்தினாலான வேல், செயின், திருமாங்கல்யம், மோதிரம், வெள்ளி வேல், வீடு, ஊஞ்சல், ஆள் ரூபம், வெளிநாட்டு நாணயங்கள், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. பித்தளை பொருட்கள், பரிவட்டங்கள், கைக்கடிகாரம், ஏலக்காய் மாலை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், உதவி ஆணையர் பச்சையப்பன் உண்டியல் திறப்பின் போது இருந்தனர்.