திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த வி.புத்தூர் மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. இக்கோவிலில் கடந்த 14ம் தேதி காப்புகட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதியுலா நடந்தது. பின்னர் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.