பதிவு செய்த நாள்
30
ஜூலை
2012
10:07
கோபிசெட்டிபாளையம்: கோபி குள்ளம்பாளையம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆடிப்பெருவிழா ஆக.,4ம் தேதி நடக்கிறது. கோபி குள்ளம்பாளையம் வரதராஜபெருமாள் கோவிலில் ஆடிப்பெருவிழாவை முன்னிட்டு ஆக., 3ம் தேதி மாலை, 4 மணிக்கு கோவிலில் இருந்து கோபி சூர்யா ஹாலுக்கு வரதராஜ பெருமாள் ஸ்வாமி மாப்பிள்ளை அழைப்பு நடக்கிறது. மாலை, 6 மணிக்கு அனுக்ஞை, ஆச்சார்யவர்ணம், விஸ்வசேனர் ஆராதனை, கலச ஸ்தாபினம், கலச பூஜை, மகாதீபாராதனை நடக்கிறது.ஆக., 4ம் தேதி காலை, 7 மணிக்கு லட்சுமி நாராயண ஹோமம், விஸ்வசேனர் ஆராதனை, கலச பூஜை, புன்யவாசனை, காலை, 8 முதல், 10.30 மணிக்குள் ஸ்ரீ தேவி, பூதேவி, வரதராஜ பெருமாள் ஸ்வாமிக்கு திருமஞ்சன அபிஷேக ஆராதனை நடக்கிறது. காலை, 10.45 முதல், 1 மணிக்குள் வரதராஜபெருமாளுக்கு திருக்கல்யாணம் மற்றும் ஊஞ்சல் சேவை பூர்ணாகுதி, மகாதீபாராதனை நடக்கிறது.