தில்லை காளி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2022 08:05
சிதம்பரம்: சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் நேற்று பக்தர்கள் வழங்கிய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
கடலூர் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், ஆய்வாளர் நரசிங்க பெருமாள் ஆகியோர் முன்னிலையில் கோவில் வளாகத்தில் உள்ள ஐந்து இந்தியர்கள் திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பழகிய காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. இதில் 12 லட்சத்து 4 ஆயிரத்து 262 ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டது. மேலும் 32 கிராம் தங்கம், 87 கிராம் வெள்ளி, மற்றும் அமெரிக்க டாலர் 27, யூரோ 25, மலேசியா ரிங்கட் 10 ஆகியன காணிக்கையாக பெறப்பட்டது . உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது கோவில் பணியாளர்கள் வாசு, ராமலிங்கம், ராஜ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.