வேடசந்தூர்: குட்டம் ஊராட்சி கருமலை ஆதி கோரக்கநாதர் மௌன குரு சித்தர் பத்மகிரி பாபா ஜீவ சமாதியில், கருமலை கந்தன் பவுண்டேஷன் மற்றும் பத்மகிரி பாபா அறக்கட்டளை சார்பில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. வேடசந்தூர், திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.