கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2022 07:05
காரைக்குடி: காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயில் தேரோட்ட விழா 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.
கொப்புடையநாயகி அம்மன் கோயில் செல்வாய் திருவிழா கடந்த மே 10 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இன்று காலை திருத்தேருக்கு அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 6. 30 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. முன்னதாக, பெண்கள் முளைப்பாரி, மதுக்குடம் எடுத்து தேரைச் சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து தேர் சங்கராபுரம் காட்டம்மன் கோவிலுக்கு சென்றது. வழிநெடுகிலும் பெண்கள் வண்ண கோலமிட்டு அம்மனை வரவேற்றனர். நாளை காலை அம்மன் கோயிலுக்கு திரும்புதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை காலை யானை வாகனத்தில் அம்பாள் வீதியுலாவும், இரவு 11 மணிக்க தெப்பத் திருவிழாவும், அதிகாலை புஷ்ப பல்லாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்லத்துரை, உதவி ஆணையர்கள் சிவலிங்கம், செல்வராஜ், செயல் அலுவலர் கணபதி முருகன் செய்திருந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.