திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்வு கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மே 2022 08:05
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த 5ம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 9ம் தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடந்தது. அன்று 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 13ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் இன்று காலை கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.