போத்தனூர்: போத்தனூர் பாரதி நகரிலுள்ள நாகபத்ரகாளியம்மன் கோவில் விழா, நேற்று முன்தினம் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் மற்றும் பூவோடு வழிபாடுடன் துவங்கியது. நேற்று காலை, பேச்சியம்மன் கோவிலில் துவங்கிய சக்தி கரக ஊர்வலம், மதியம் கோவிலை வந்தடைந்தது. திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். இன்று காலை, 9:00 மணிக்கு பொங்கல் வழிபாடும், மாலை, 6:00 மணிக்கு மாவிளக்கு வழிபாடும் நடக்கின்றன. இதனையொட்டி செல்வ வினாயகர், பாலமுருகன் கோவிலிலிருந்து மேளதாளம், வாணவேடிக்கையுடன் மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடைகிறது.நாளை காலை மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் நாகபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.