உடுமலை: உடுமலை கருவண்ணராயர் சுவாமி கோவில் திருவிழாவையொட்டி, இன்று, கோவிலில், திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது.உடுமலை நகரம், தாராபுரம் ரோட்டில், வீரசுந்தரி சமேத கருவண்ணராயர்சாமி கோவில் உள்ளது. இக்கோவில் ஆண்டுத்திருவிழா நடந்து வருகிறது.நேற்று பல்வேறு புண்ணிய தலங்களிலிருந்து, பக்தர்கள் தீர்த்த நீர் சேகரித்து உடுமலை கொண்டு வந்தனர். இந்த தீர்த்த குடங்களை பாரம்பரிய இசை வாத்தியங்கள், நடனத்துடன் ஊர்வலமாக பக்தர்கள் கோவிலுக்கு எடுத்துச்சென்றனர்.தொடர்ந்து, சக்தி அழைத்தல், சிறப்பு அபிேஷக அலங்கார பூஜைகள் நடந்தன. இன்று, சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியும், குதிரையெடுத்தல், சுவாமி கோவில் திருவீதி உலா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர்.