Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானவாபி வழக்கு விசாரணை எப்போது? சித்தநாயக்கன்பாளையம் தேர் திருவிழா; பக்தர்கள் பரவசம் சித்தநாயக்கன்பாளையம் தேர் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் : நள்ளிரவில் கண்விழித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் : நள்ளிரவில் கண்விழித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

19 மே
2022
10:05

திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் : நள்ளிரவில் கண்விழித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடுமயிலாடுதுறை: சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் நடைபெற்றது. நள்ளிரவில் நடந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட  திருவெண்ணீற்றுமையம்மை உடனாகிய சிவலோக தியாகேசர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் தனி சன்னதியில், தோத்திரபூர்ணா பிகையுடன் திருஞானசம்பந்தர் திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். இக்கோவிலில்   அன்றைய காலத்தில்  திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற  அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமாகிய இந்த ஐதீக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி மூல நட்சத்திரத்தில்  நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ தொற்று பரவல் காரணமாக  பக்தர்கள் இன்றி நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் திருவீதி வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு ஊஞ்சல் உற்சவம் செய்விக்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாண சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க சிவாச்சாரியார்கள், தோத்திர பூர்ணாம்பிகைக்கு  மங்கலநாண் அணிவித்து திருக்கல்யாணம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு ,மகா தீபாராதனை காட்டப்பட்டது .அதன் பின்னர் உலக நன்மைக்காக பங்கேற்ற பக்தர்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.  திருக்கல்யாண வைபவ நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்விழித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அதிகாலை சிவ ஜோதிதரிசனம் நடைபெற்றது. ஸ்ரீ மத் சட்டநாததம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று அருள்பிரசாதம் வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க, மதுரை வைகை ஆற்றில் பச்சைப்பட்டு உடுத்தி ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரையில் சித்திரைத் திருவிழாவில் வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ள சாரங்கபாணி கோவில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar