பதிவு செய்த நாள்
28
மே
2022
05:05
கோத்தகிரி: கோத்தகிரி ஹேப்பிவேலி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், பூ குண்டம் திருவிழா சிறப்பாக நடந்தது. கோத்தகிரி ஹேப்பி வேலி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் மண்டல பூஜை நிறைவு நிகழ்ச்சி நடந்த நிலையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.
காலை, 11:00 மணிக்கு, அம்மனுக்கு நடந்த பால் அபிஷேகம், கும்மி பாட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து, ஸ்ரீ பச்சை மரத்தையன் பூஜை மற்றும் உச்சக்கால நடந்தது. தொடர்ந்து, பகல், 1:00 மணிக்கு, பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், குழந்தைகள் உட்பட, ஏராளமான பக்தர்கள் பூ குண்டம் இறங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, அம்மன் திருத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நாளை (29ம் தேதி) காலை, 8:00 மணிக்கு, அம்மன் மஞ்சள் நீராடலும், பகல், 1:00 மணிக்கு, உச்சகால பூஜை, 2:00 மணிக்கு, அன்னதானம், மாலை, 4:00 மணிக்கு, மாவிளக்கு பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் ஹேப்பி வேலி பகுதி மக்கள் செய்தனர்.