புதுச்சேரி : புதுப்பேட்டை புத்துளாய் மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் மற்றும் செடல் மகோற்சவம் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 6.30 மணிக்கு அபிஷேகம் தீபாராதனையும் நடந்தது. 27ம் தேதி முதல் 2ம் தேதி வரை ஒவ்வொரு நாள் காலையும் அபிஷேகம், இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடந்தது. 3ம் தேதியான நேற்று காலை அபிஷேக தீபாரதனை நடந்தது. மாலை 5 மணிக்கு பக்தர்கள் செடல் போடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, செடல் குத்தி தங்களது நேர்த்தி கடன்களைச் செலுத்தினர்.