* நல்ல மனம் கொண்டவர்கள்தான் சத்தியத்தை விரும்புவார்கள். * பிரச்னையில் இருந்து விலகி நில்லுங்கள். அதுவே முன்னேற்றத்திற்கான வழி. * வெறும் வாய்ப்பேச்சினால் எவ்வித பலனும் கிடைக்காது. * அன்பான வார்த்தைகளை பிறருக்கு பரிசாக கொடுங்கள். * நல்லதை செய்யுங்கள். முடியாவிட்டால் அமைதியாக இருங்கள். * உங்கள் உழைப்பிற்கு தகுந்த ஊதியம் நிச்சயம் கிடைக்கும். * ஆண்டவர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். * நான் தர்மம் செய்தேன் என்று தற்பெருமை பேசாதீர்கள். * ஏழைகளுக்கு உதவி செய்வோர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்கள். * ஆர்வமிக்க உள்ளத்தோடு வேலை செய்யுங்கள். – பொன்மொழிகள்