நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம் திடீர் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2022 10:06
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு, வளாகத்திலேயே சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது, மரகதவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் கோவில்.இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவலால், பிரம்மோற்சவ விழா தடைப் பட்டிருந்தது.இந்நிலையில் இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்சவம், இம்மாதம் 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை 10:00 மணிக்கு உற்சவர் திருமஞ்சனமும், மாலை 6:00 மணிக்கு பத்தி உலாத்தலும், ஆண்டாள் சன்னிதி மண்டபத்தில் ஊஞ்சல் சேவையும் நடக்கிறது.ஏழாம் திருநாளான நேற்று, கோவில் தேரோட்டம் நடைபெறவிருந்தது. இந்நிலையில் கோவில் அருகே துக்க நிகழ்ச்சி நடந்ததால், தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து லட்சுமி நரசிம்மர், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, கோவில் வளாகத்திலே உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.