அம்பாசமுத்திரம்: ஊர்க்காடு திருக்கோட்டியப்பர் கோயிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. அம்பாசமுத்திரம் அருகேயுள்ள ஊர்க்காடு சிவகாமி அம்பாள் சமேத திருக்கோட்டியப்பர் கோயிலில் ஆனி அமாவாசையை முன்னிட்டு நேற்று பத்ர தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருக்கோட்டியப்பர் உழவாரப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.