ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி ஸ்வாதி உற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2022 10:06
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனை முன்னிட்டு இன்று காலை 9:30 மணிக்கு கொடிப்பட்டம் மாடவீதிகள் சுற்றி பெரியாழ்வார் சந்நிதிக்கு கொண்டு வரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பாலாஜி பட்டர் கொடி பட்டம் ஏற்றினார். பின்னர் வடபத்ரசயனர் சன்னதியில் பெரியாழ்வார் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டார்கள் பங்கேற்றனர். ஜூலை 7 அன்று காலை 07:30 மணிக்கு செப்பு தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.