பழநி: பழநி மலைக்கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 2 கோடியே 15 லட்சத்து 5 ஆயிரம் கிடைத்துள்ளது. பழநி மலைக்கோயிலில் நேற்று (ஜூன்.29 ல்) உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 947 கிராம் தங்கமும், 7 ஆயிரத்து 933 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ. 2 கோடியே 15 லட்சத்து 5 ஆயிரத்து 60 ,மற்றும் 419 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் பிரகாஷ் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்புடன் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது.