ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த நாற்பத்தி ஒன்பது நாட்களில் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் .அவற்றை புதன்கிழமை கோயில் அதிகாரி சாகர் பாபு முன்னிலையில் 29.6. 2022 அன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் ஊழியர்கள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக . சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் பணமாக :.1,22,07,988/ தங்கம் : 133 கிராம், வெள்ளி : 660 கிலோ, வெளிநாட்டு பணம் 55 டாலர்கள் வந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார்.