பதிவு செய்த நாள்
30
ஜூன்
2022
04:06
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் பூஜாரிகளுக்கு பயிற்சி முகாம் துவங்கியது.
தமிழக கிராம கோயிலில் பணிபுரியும் பூஜாரிகளுக்கு கடவுளுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள், தியான ஸ்லோகங்கள், அர்ச்சனை மந்திரங்கள், அபிஷேக முறைகள் குறித்து கிராம கோயில் பூஜாரிகள் பேரவை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் 52வது ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் துவங்கியது. விழாவுக்கு தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் மண்டல தலைவர் சரவணன் வரவேற்று பேசினார். கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை நிறுவனர், தமிழக வி.ஹெச்.பி., நிறுவனத் தலைவர் எஸ். வேதாந்தம் சிறப்புரை ஆற்றினார். விழாவில் கிராம கோயில் பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் சோமசுந்தரம், இணை பொது செயலாளர் ராமசுப்பு, புலவர் வசந்தா, புலவர் பாரதி, பக்ஷிசிவராஜன், சுவாமி பிரணவானந்தா, சுவாமி சிவசேதுராம முருகவேல், சிவமணி குருக்கள், சாந்தா அறக்கட்டளை நிர்வாகி சாந்தாம்மா மற்றும் வி.ஹெச்.பி., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் முகாமில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து 125 கிராம கோயில் பூஜாரிகள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர்.