ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் கொரோனா விழிப்புணர்வை பொருட்படுத்தாமல், பக்தர்கள் முககவசம் இன்றி உலா வருவதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவி வருவதால் பொது இடங்களில் கூடும் மக்கள் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. ஆனால் ராமேஸ்வரத்தில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் வந்திறங்கும் வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கொரோனா தாக்கம் அச்சமின்றி முககவசம் அணியாமல் உள்ளனர். இவர்கள் கோயிலில் நீராடி, சுவாமி தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி உள்ளிட்ட பல சுற்றுலா பகுதிகளுக்கு செல்கின்றனர். இதனால் உள்ளூர், வெளியூர் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் முககவசம் இன்றி உலா வருவதால் ராமேஸ்வரம் பகுதியில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே ராமேஸ்வரம் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரவல் விழிப்புணர்வு ஏற்படுத்தி முககவசம் அணிய கட்டாயப்படுத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.