காஞ்சிபுரம் தேவகுரு குருபகவான் கோயிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2022 10:07
காஞ்சிபுரம்: உக்கம் பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், புதிதாக கட்டப்பட்ட தேவகுரு என அழைக்கப்படும் பிரகஸ்பதி குருபகவான் கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், 27 நட்சத்திர அதிதேவதைகளுக்கு தனித்தனி சன்னிதி உள்ளது. இங்கு, தேவகுரு என அழைக்கப்படும் பிரகஸ்பதி குருபகவான், தன் மனைவி தாரையுடன் தம்பதி சமேதராய், யானை வாகனத்தில் அமர்ந்திருப்பது போல சிலை நிறுவப்பட்டு, நுாதன விமானத்துடன், ஆகம விதிப்படி தனி கோவில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது.கும்பாபிஷேக தினமான நேற்று காலை 11:00 மணிக்கு, கோவில் கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. தொடர்ந்து, மஹா அபிஷேகமும், பகல் 12:00 மணிக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.